முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கோவையில் முதலீட்டாளர்கள் மாநாடு...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கோவையில் முதலீட்டாளர்கள் மாநாடு...

கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில், வெளிநாடு மற்றும் உள்நாட்டின் முன்னணி நிறுவனங்கள், முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளன.

ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு, ஆட்சிக்கு வந்த முதல் மாதத்திலேயே சென்னை கிண்டியில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியது. தொடர்ந்து 2-வதாக சென்னை கலைவாணர் அரங்கில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இவ்விரு மாநாடுகளிலும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அடுத்தகட்டமாக 3-வது முதலீட்டாளர்கள் மாநாடு, கோவையில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், 40 முதல் 45 வெளிநாடு மற்றும் உள்நாட்டின் முன்னணி நிறுவனங்கள், முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளன. இதனால் கோவையில் தொழில் துறை விரிவடையும் என்றும், வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நிகழ்ச்சியின்போது, பின்டெக் கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com