தூத்துக்குடியில் அதிகளவில் கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்!

தூத்துக்குடியில் அதிகளவில் கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்!

தூத்துக்குடி: துறைமுகத்தில் அதிக அளவில் கரையொதுங்கும் மீன்கள் குறித்து, மீன்வளத்துறை ஆய்வு செய்து வருகின்றனர் 

தூத்துக்குடியில் உள்ள மீன்பிடி துறைமுகம் பகுதியில், மீன்கள் வகையை சேர்ந்த ஜெல்லி மீன்கள், கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கி வருகிறது. மீன்பிடி துறைமுகம் மற்றும்  பழைய துறைமுகம் ஒட்டிய கடல் பகுதிகளில் ரோஸ் மற்றும் வெள்ளை நிற ஜெல்லி மீன்கள் படையெடுத்து திரண்டுள்ளன. 

ஆழ்கடல் பகுதிகளில் மட்டும் காணப்படும் இந்த ஜெல்லி மீன்களானது, மனித உடம்பில் பட்டால் அரிப்பு ஏற்படுத்தும் என்பதால், அவற்றை சொறி மீன்கள் என அங்குள்ள மீனவர்கள் அழைக்கின்றனர். 

மீனவர்களின் வலைகளில் இவ்வகை மீன்கள் சிக்கினாலும், அவற்றை கை படாமல், மீண்டும் கடலிலேயே விட்டுவிடுகின்றனர். ஆழ்கடல் பகுதிகள், பவளப்பாறை மாற்றும் குளிர்ந்த நீர் பகுதிகளில் மட்டுமே வசிக்கும் இந்த மீன்கள், தற்போது கரை ஒதிங்கியுள்ளதால், இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்படும் என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து மீனவர் ஒருவர் கூறுகையில்," புதிய துறைமுகம் பகுதியில் விரிவாக்கம் பணிகள் நடைபெறுவதால், அப்பகுதியில் உள்ள ஜெல்லி மீன்கள், நீரோட்டம் இந்த பகுதிக்கு உள்ளதால், இங்கு வந்திருக்கலாம்" என கூறியுள்ளார்.