"கலைஞர் நூற்றாண்டு விழா" முதலமைச்சர் நாளை ஆலோசனை..!!

"கலைஞர் நூற்றாண்டு விழா" முதலமைச்சர் நாளை ஆலோசனை..!!

கலைஞர் நூற்றாண்டு விழாவை நடத்துவது தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழா தமிழநாடு அரசால் வரும் ஜூன் மாதம்  மூன்றாம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நாளை காலை 11 மணியளவில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் பிறந்து 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு கலைஞர் நூற்றாண்டு விழாவை ஓராண்டு கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்துவது தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நாளை தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

குறிப்பாக, அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பது, விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க:கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் இவர்தான்...அதிகாரப்பூர்வமாக அறிவித்தது காங்கிரஸ் தலைமை...!