பல்லடம் அருகே வடமாநிலத்தவர் கட்டிய காவி-பச்சைக் கொடியால் பரபரப்பு!

இன்று காலை அவர்கள் வசிக்கும் அறையின் மேல்பகுதிகள் மற்றும் அருகிலுள்ள  தென்னை மரங்களில் பச்சை மற்றும் காவி நிறங்களில் பிறைநிலா மற்றும் நட்சத்திரம் பொறிக்கப்பட்ட கொடிகள் பறந்து கொண்டிருந்தன.

பல்லடம் அருகே வடமாநிலத்தவர் கட்டிய காவி-பச்சைக் கொடியால் பரபரப்பு!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கரடிவாவி அருகே செட்டிபாளையம் சாலையில் கதிர்வேல் தோட்டம் என்ற பகுதியில் தனியார் பனியன் நிறுவனத்தில்  வடமாநில தொழிலாளர்கள் 50 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். 

வட இந்திய முஸ்லீம்கள்

இதில் சில முஸ்லீம் இளைஞர்களும் உள்ளனர்.இந்நிலையில் இன்று காலை அவர்கள் வசிக்கும் அறையின் மேல்பகுதிகள் மற்றும் அருகிலுள்ள  தென்னை மரங்களில் பச்சை மற்றும் காவி நிறங்களில் பிறைநிலா மற்றும் நட்சத்திரம் பொறிக்கப்பட்ட கொடிகள் பறந்து கொண்டிருந்தன. அதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் பாகிஸ்தான் கொடி பறப்பதாக நினைத்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அந்த கொடிகள் உள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன.

போலீசாருக்குத் தகவல் 

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கரடிவாவி ஊராட்சி தலைவர் ரஞ்சிதா பகவதிக்கு தகவல் அளித்தனர்.அதனை தொடர்ந்து ஊராட்சி தலைவர் அங்கு சென்று பார்த்த பொழுது கொடி இருந்தது. இது குறித்து ஊராட்சி தலைவர் காமநாயக்கன் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.தகவல் தெரிவிக்கப்பட்டது . இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த போலீசார் அங்கிருந்த வடமாநில வாலிபர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

நேர்த்திகடனுக்காக கொடியா?

அதில் அங்கு தங்கியுள்ள முஸ்லீம் இளைஞர்கள் அடுத்தவாரம் கொண்டாட பட உள்ள பண்டிக்கைக்காக நேர்த்தி கடன் செலுத்துவதற்காக கொடிகளை கட்டியுள்ளதாக தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து போலீசார் கொடிகளை அகற்ற கூறியதை தொடர்ந்து கொடிகளை வடமாநில தொழிலாளர்களே அகற்றினர்.வட மாநில இளைஞர்கள் கட்டிய கொடியை பாகிஸ்தான் கொடி என நினைத்து பொதுமக்கள் அங்கு கூடியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.