சென்னை - தூத்துக்குடி சிறப்பு ரயில்!

சென்னை - தூத்துக்குடி சிறப்பு ரயில்!

தூத்துக்குடி பனிமயமாதா ஆலய தங்கத் தேரோட்டத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. 

உலக பிரசித்தி பெற்ற பனிமயமாதா ஆலயம்  தங்கத்தேரோட்டம் நடைபெற உள்ளது. இதற்கு வெளிமாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தூத்துக்குடிக்கு வழக்கம். அது போலவே, இம்முறையும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு ரயில் 3ம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்படுகிறது. மறுநாள் அதிகாலை 3. 10 மணிக்கு தூத்துக்குடியை வந்தடைகிறது. அதே போன்று மறுமார்க்கத்தில் 4ம் தேதி தூத்துக்குடியில் இருந்து மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 2.45 மணிக்கு சென்னையை சென்றடைகிறது. 

இதையும் படிக்க || தொடர்கதையாகும் புள்ளிங்கோக்களின், படிக்கட்டு சாகச பயணம்!