தமிழகத்தில் இரண்டாவது அலையில் அதிகபட்ச பாதிப்புகள் கண்டறியபட்ட நிலையில் பாதிப்பிற்கான காரணம் குறித்து தமிழக சுகாதாரத்துறை தொடர்ந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி சமுதாய பரவல் குடும்ப வழி பரவல், மீண்டும் நோய் தொற்றால் பாதித்தவர்கள், தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என பல்வேறு வகைப்பாட்டின் அடிப்படையில் 1159 மாதிரிகள் பெங்களூரில் உள்ள வைரஸ் மரபு குறித்த ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டது.