மேலும் அவர்களின் உறவினர்களுடன் தொலைபேசி வாயிலாக பேசுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவு ஏற்பட்ட ஒரு மீனவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்த இந்திய தூதரக அதிகாரி அவரை மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்ததாகவும் இந்திய மீனவர்கள் மற்றும் படகுகளை முன்கூட்டியே விடுவிப்பது தொடர்பான பிரச்சினையை இலங்கை அரசிடம் எடுத்துக் கூறி உள்ளதாகவும் மத்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.