இன்றைய தேவை சுய கட்டுப்பாடு தான் என்பதை வலியுறுத்தும் விதமாக, தமது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள அவர், முழு ஊரடங்கு, மருத்துவர்களின் அர்ப்பணிப்பு, மருத்துவ கட்டமைப்பு, துடிப்பான நிர்வாகம் ஆகியவற்றால் தான், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாக கூறியுள்ளார். கட்டுப்பாடுகளை பின்பற்றினால் எந்த அலைகளை யும் நாம் எதிர்கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் பொதுமக்கள் அலட்சியமாக இருக்க கூடாது என தெரிவித்துள்ளார்.