சமூகநீதியின் வில்லன் பாஜக என்று எழுத்தாளர் அருணன் விமர்சனம் செய்துள்ளார்.
எழுத்தாளர் மற்றும் இடது சாரி ஆதரவாளரான அருணன் கதிரேசன் பாஜவை பற்றி பேசுவதில் வல்லவர்.இவ்வப்போது பாஜகவை பற்றி சர்ச்சைக்குறிய கருத்துக்களை பேசி வருவதை வழக்கமாக வைத்திருப்பவர்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், நீட் பற்றிய அனைத்து கட்சி கூட்டம் பாஜகவின் வர்ணாஸ்ரம சுயரூபத்தை அம்பலப்படுத்தியுள்ளது, கூட்டணி கட்சிகளிடமிருந்து அதை தனிமைப்படுத்தியுள்ளது, ஆளுநரின் இழுத்தடிப்பிற்கு அதுவே காரணம் என்பதை பகிரங்கப்படுத்தியுள்ளது. சமூகநீதியின் வில்லன் பாஜகவே என கூறியுள்ளார்.
— Arunan Kathiresan (@Arunan22) January 8, 2022