மதுரையில் திடீரெனெ எழுந்த சுழற்காற்று... இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

மதுரையில் திடீரெனெ எழுந்த சுழற்காற்று... இணையத்தில் வைரலாகும் வீடியோ!!
Published on
Updated on
1 min read

பொதுவாக வானம் இடி மற்றும் மின்னலுடன் காணப்படும்போது தான் சுழற் காற்று தோன்றும். அதாவது வானிலை மோசமாக மாறும் போது சுழற் காற்று உண்டாகும். அப்பொழுது சுழற் காற்றின் வேகம் மற்றும் அளவு பெரிதாக இருந்தால், அதனை சூறாவளி எனவும் கூறுவார்கள்.

ஆனால் நம்ம மதுரையில், மாட்டுத்தாவணி தனியார் பேருந்து நிலையத்தில் திடீரென வானுயர சுழற்காற்று ஒன்று உண்டாகியுள்ளது. ஆனால் அச்சமயத்தில், வானிலையும் சீராக தான் இருந்துள்ளது. ஆனாலும் கூட சுழற்காற்று உண்டாகி, நகர்ந்து சென்றுள்ளது. இதனால், அவ்விடத்தில் இருந்த குப்பைகள் எல்லாம் சுழலில் சிக்கி பறந்துள்ளது.

சுழற்காற்று, சற்று பெரிதாகவே காணப்பட்ட நிலையில், பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள் அதை ஆச்சரியத்துடன் பார்த்து, செல்போனில் வீடியோவும் எடுத்துள்ளனர். தற்போது அந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதையும் படிக்க || 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com