1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த தங்க புத்தகங்கள் - மலையாள குறிப்புகள்; கண்காட்சியில் முதல் முறையாக இடம்பிடிப்பு!

1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த தங்க புத்தகங்கள் - மலையாள குறிப்புகள்; கண்காட்சியில் முதல் முறையாக இடம்பிடிப்பு!

இங்கிலாந்து லண்டன் கண்காட்சியில் ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த தங்கப் புத்தகங்கள் மற்றும் கடிதங்கள் சில மலையாள எழுத்துக்களுடன் வைக்கப்பட்டுள்ளது காண்போரை கவரச்செய்கிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரால் மட்டுமே பார்க்கப்பட்டு வந்த இந்த வரலாற்று சிறப்பு மிக்க பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வருவது இதுவே முதல்முறை. பல்வேறு காலகட்ட வரலாறு, அரசியல் மற்றும் மதம் சம்பந்தப்பட்டவற்றை விளக்குபவையாக இவை கண்டறியப்பட்டுள்ளது.

இவற்றில் ஒரு புத்தகத்தில் கோழிக்கோடு நிர்வாகத்தினர் மற்றும் டச்சுக்காரர்களுக்கு இடையேயான 17ம் நூற்றாண்டின் ஒப்பந்தம் குறித்தும் மலையாளத்தில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.