குறும்புதனமாக செயல்படும் குழந்தைகளை குரங்கு சேட்டை செய்யாதே என்பார்கள். அப்படி ஏன் சொல்கிறார்கள் என்பதை இந்த வீடியோவை பார்த்தாலே தெரியும். நீலகிரி மாவட்டம் உதகை அருகே கல்லட்டி சாலையில் மேய்ந்து கொண்டிருந்த சேவலை 3 குட்டி குரங்குகள் சீண்டியதுடன் அதனுடைய கொண்டையை பிடிக்க முயன்றன.
3 குட்டி குரங்குகளுக்கு சாவலாக சேவலும் பின்வாங்காமல் எதிர்த்து நின்று சம்மாளித்தது. ஒரு கட்டத்தில் சேவல் கொத்தி விடுமோ என்ற அச்சத்தில் முயற்சியை கைவிட்டு திரும்பி சென்றன. இந்த காட்சி சமூக வலை தலங்களில் வைரலாகி வருகிறது.