கடும் வெப்பம் காரணமாக டெல்லி உள்ளிட்ட 7 மாநிலங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை - இந்திய வானிலை ஆய்வு மையம்!

கடும் வெப்பம் காரணமாக டெல்லி உள்ளிட்ட 7 மாநிலங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை - இந்திய வானிலை ஆய்வு மையம்!

இந்தியாவில் கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் டெல்லி உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களில் கோடை வெப்பம் கடுமையாக அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக பொதுமக்கள் தங்களுடைய வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகிறார்கள். கடுமையான வெப்பம் காரணமாக பல இடங்களில் காட்டுத் தீ மற்றும் தீ விபத்தும் அதிகளவு ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் விஞ்ஞானி ஆர். கே.ஜெனமணி, டெல்லி உள்ளிட்ட  7 வட மாநிலங்களுக்கு வெப்ப மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மே 2-ந் தேதி முதல் இந்த வெப்பத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், அதே நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.