6 முறை கருக்கலைப்பு..? நடிகை விஜயலெட்சுமியிடம் 4 பேர் கொண்ட மருத்துவர் குழு பரிசோதனை...!

சென்னையில் பெண் மருத்துவர் ஒருவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோதே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் வசித்து வந்தவர் அன்விதா. 24 வயதான இவர் தனியார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார். இவரது தந்தை பிரவீன் என்பவரும் கண் மருத்துவராக உள்ளார்.
மருத்துவத்தை விரும்பி படித்து, பணியிலும் இணைந்த அன்விதாவுக்கு தன் உடலை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்வதிலும் ஆர்வம் அதிகம். அதன்படி நாள்தோறும் கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலையில் உள்ள தனியார் உடற்பயிற்சி மையத்துக்கு சென்று ஒரு மணி நேரம் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.
இந்நிலையில் 23-ம் தேதியன்று இரவு சுமார் 7 மணிக்கு உடற்பயிற்சிக் கூடத்துக்கு சென்று வார்ம்-அப்பில் ஈடுபட்டார். அப்போது திடீரென வலிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து கீழே விழுந்த அன்விதா துடிதுடித்துக் கொண்டிருந்தார்.
இதனை கவனித்தவர்கள் உடனடியாக அன்விதாவை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்க வந்த மருத்துவர்கள், அன்விதா ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக கூறினர்.
மேலும் அன்விதா உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சி மேற்கொண்டபோது மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக பெற்றோரிடம் தெரிவித்தனர். இதையடுத்து அன்விதாவின் உடலை வீட்டுக்கு கொண்டு சென்ற பெற்றோர் இறுதிச்சடங்கு செய்து நல்லடக்கம் செய்தனர்.
உடல் எடையை குறைப்பதற்காக சில மாதங்கள் உடற்பயிற்சியில் ஈடுபட்ட அன்விதா, 24 வயதிலேயே மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் புனித்குமார், மிஸ்டர் தமிழ்நாடு அரவிந்த், ஐதராபாத் போலீஸ் அதிகாரி விஷால், யூ-டியூபரும் பாடி பில்டருமான ஜோ லிண்டர், மதுரை சேர்ந்த ஸ்ரீ விஷ்ணு, நெமிலிச் சேரியை சேர்ந்த சபரிமுத்து என்கிற ஆகாஷ் உள்பட பலர் உடற்பயிற்சியின்போது உயிரிழந்தது பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில் பெண் மருத்துவரும் பலியான சோகம் ஜிம் வாசிகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிக்க | "நீ மாமனிதன் இல்ல.. மாமா மனிதன்.." சீனுராமசாமியை டார் டாராக கிழித்த ப்ளூசட்டை மாறன்.. !
திருநெல்வேலி மாவட்டம் மணிமூர்த்தீஸ்வரத்தில் அட்டவணைப் பிரிவு இளைஞர்கள் தாக்கப்பட்டது பேசு பொருளாக மாறியுள்ள நிலையில் மேலும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
கடந்த 30 ஆம் தேதி ஆச்சிமடம் பகுதியில் பட்டியல் சமூக இளைஞர் மாரியப்பன் என்பவரை அவழியாக சென்ற கும்பல் வழிமறித்து ஜாதியை கேட்டு கல்லால் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனையடுத்து, படுகாயம் அடைந்த நபர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், தன்னைத் தாக்கியவர்கள் ஊர் பெயரையும் ஜாதி பெயரையும் கேட்டு தாக்குதல் நடத்தியதாக படுகாயம் அடைந்த இளைஞர் குற்றம் சாடியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக திருநெல்வேலி மாவட்டம் சிவந்திபட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தாக்குதல் நடத்திய கும்பலை தேடி வருகின்றனர்.
இதையும் படிக்க | அனுமதியின்றி அத்துமீறி பாஜக கொடி ஏற்றிய பாஜகவினர்..! அதிரடியாக கைது செய்த காவல்துறை..!
நெல்லை மாவட்டம் மணிமுத்தீஸ்வரம் அருகே அட்டவணைப் பிரிவு இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்து மானபங்கப்படுத்தி தாக்குதல் நடத்திய 6 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாநகரத்திற்கு உட்பட்ட மணிமூர்த்தீஸ்வரம் ஆற்றுப்பகுதியில் கஞ்சா போதையில் பட்டியல் பிரிவு இளைஞர்கள் இரண்டு பேரை நிர்வாணப்படுத்தி சிறுநீர் கழித்து தாக்கிய கும்பல் கைது.
திருநெல்வேலி அடுத்த மணிமூரத்தீஸ்வரம் ஆற்றுப்பகுதியில், கடந்த 30ஆம் தேதி மாலை வேளையில் ஒரு கும்பல் மது அருந்திக்கொண்டிருத்தனர். அப்போது அவர்கள் கஞ்சா போதையில் அங்கு வந்த பட்டியல் பிரிவு இளைஞர்களை வழிமறித்து, ஜாதியைக் கேட்டு தெரிந்து கொண்டு நிர்வாணப்படுத்தி அவர்கள் மீது சிறுநீர் கழித்துள்ளனர்.
மாலையிலிருந்து நள்ளிரவு வரை நிர்வாணப்படுத்தி தாக்கியதாக அந்த இளைஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கொடூரமாக தாக்கப்பட்ட மனோஜ் மற்றும் மாரியப்பன் படுகாயங்களோடு இரண்டு இளைஞர்களும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிகக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த திருநெல்வேலி மாநகர் தச்சநல்லூர் காவல்துறையினர், வன்கொடுமை வழக்கு, வழிபறி கொள்ளை, ஆயுதங்களால் தாக்குதல், அவமானப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆறு பேரை கைது செய்துள்ளனர்.
ஆயுதங்களோடு சுற்றிய பொன்மணி (25) , நல்லமுத்து (21), சிவா(22), ராமர்(22), லட்சுமணன் (20) ஆயிரம்(19), ஆகிய ஐந்து பேர் கொண்ட அந்த கும்பல் கொலை திட்டத்தோடு மாநகருக்குள் வந்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
மேலும், மாநகர நுண்ணறிவு பிரிவு முறையாக கண்காணிப்புகளை மேற்கொள்ள மனு அளிக்கப்பட்டது. தென் மாவட்டங்களில் நடைபெறும் தொடர் ஜாதிய வன்முறைகள் தடுத்திடவும் வழியுறுத்தபட்டது.
இதையும் படிக்க | 3-வது முறையாக செந்நிறமாக மாறிய கடல்நீர் ..? அதிர்ச்சியில் மக்கள்..!
களமச்சேரி குண்டுவெடிப்புக்கு நான் தான் காரணம் என போலீசில் சரணடைந்த டொமினிக் மார்ட்டின் முன்கூட்டியே பதிவு செய்த வீடியோ வெளியானது.
கேரளா மாநிலம் கொச்சி களமச்சேரியில் உள்ள கிறிஸ்தவ கூட்டரங்கில் பிரார்த்தனை கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, மூன்று முறை வெடிகுண்டு வெடித்தது. அதில் இருவர் பலியான நிலையில் 56 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக டொமினிக் மார்ட்டின் என்பவர் போலீசில் சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் டோமினிக் மார்ட்டின் , போலீசில் சரண் அடைவதற்கு முன்பு சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில், கேரளா, களமச்சேரி குண்டுவெடிப்புக்கு நான் தான் காரணம், சபையின் செயல்பாடு தனக்கு பிடிக்கவில்லை என்பதால் கடந்த 4 ஆண்டுகளாக சபையின் கூட்டங்களுக்கு செல்வதில்லை எனக் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ஆளுநர் மாளிகையின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தின் மூலம் தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தமிழ்நாட்டில் ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது என்றும், இதனால், பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது என்றும் கூறீனார்.
முற்றுலும் தோற்றுபோன அரசாக தமிழ்நாடு அரசு உள்ளது என்றும், குற்றவாளியின் பின்னணியை காவல்துறையினர் கண்டறிய வேண்டும் எனௌம் கூறினார்.
இதையும் படிக்க | ஆளுநர் மாளிகையில் குண்டு வீச்சு: காவல் ஆணையர் விளக்கம்..!