
தமிழகத்தில் மீண்டும் கொரோனாவின் பரவல் அதிகரித்து வருவதால், மாநில அரசு சார்பில் பல்வேறு கட்டுபாட்டு விதிமுறைகளை பிறக்கப்பட்டுள்ளது.
இரவு நேர ஊரடங்கு, ஞாயிறுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என தமிழக அரசு சார்பில் உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனை கலாய்க்கும் விதமாக சமூகவலைத்தளங்களில் பல மீம்ஸ்களை தெறிக்கவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.
மாணவர்கள் பள்ளியில் பரீட்சைக்கு தயாராகும் முன்னர் தங்கள் நோட்டில் உள்ள பேப்பரை சும்மா கிழி என மீம்ஸ் போட்டுள்ளனர்.
சார் முழு ஊரடங்கு சொன்னீங்க.. ஆனா பக்கத்து வூட்ல கறிக் குழம்பு வாட வருது என மீம்ஸ் போட்டுள்ளனர்.
காணும் பொங்கல் அன்று ஒருத்தரையும் காணவில்லை என மீம்ஸ் ஒன்று வைரலாகி உள்ளது.