'5ஜி' அலைக்கற்றை விவகாரம்: நிறுத்தப்பட்ட இந்தியாவுக்கான விமான சேவை மீண்டும் தொடக்கம்

அமெரிக்காவில் '5ஜி' அலைக்கற்றை சேவையால் விமான சேவை பாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டதால், நிறுத்தப்பட்ட இந்தியாவுக்கான விமான சேவை மீண்டும் துவங்கியது.

'5ஜி' அலைக்கற்றை விவகாரம்: நிறுத்தப்பட்ட இந்தியாவுக்கான விமான சேவை மீண்டும் தொடக்கம்

அமெரிக்காவில் '5ஜி' அலைக்கற்றை சேவையால் விமான சேவை பாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டதால், நிறுத்தப்பட்ட இந்தியாவுக்கான விமான சேவை மீண்டும் துவங்கியது.

அமெரிக்காவில் 5ஜி அலைக்கற்றை மூலம் தொலை தொடர்பு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 5ஜி சேவையால் சில குறிப்பிட்ட விமானங்களில் பயன்படுத்தப்படும் தொலை தொடர்பு சாதனங்களில் பாதிப்புஏற்படலாம் என கூறப்பட்டது.

அதனால் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நேற்று முன்தினம் இயக்கப்படவிருந்த எட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

இது தொடர்பாக அமெரிக்க விமான ஆணையம் நேற்று வெளியிட்ட செய்தியில், '5ஜி சேவையால் விமானங்களில் பயன்படுத்தப்படும் மாற்று தொலை தொடர்பு அலைக்கற்றுகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என கூறப்பட்டது.

இதை, போயிங் விமான தயாரிப்பு நிறுவனமும் உறுதி செய்தது. இதையடுத்து, அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு ஏர் இந்தியா நிறுவனம் நேற்று ஆறு விமானங்களை இயக்கியது.