அமெரிக்காவின் இசை விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் பலி.!!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இசை விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் வரை பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் இசை விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் பலி.!!
Published on
Updated on
1 min read

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இசை விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் வரை பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று ஆஸ்ட்ரோ வொர்ல்ட் என்னும் இசை விழா நடைபெற்றது. இதில் ஏராளமான இசைப்பிரியர்கள் பங்கேற்றனர்.

இந்த நிலையில் இசை விழா நடைபெற்ற மேடை நோக்கி ஏராளமான மக்கள் கூட்டமாக ஒரே நேரத்தில் நகர்ந்ததால், கடும் நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 8 பேர் பலியாகியுள்ளனர்.

மற்றும் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஹூஸ்டன் தீயணைப்புத் துறையினர், கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயம் அடைந்த 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 11 பேருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறினர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com