"யாராவது எனக்கு உதவ முடியுமா?"!!உதவிக்கு அழைத்த பாகிஸ்தான் பிரதமர்!!!
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு 2001 ஜுன் மாதம் சீனாவின் ஷாங்காய் பகுதியில் நிறுவப்பட்டது. முதலில் ஆறு உறுப்பு நாடுகளுடன் தொடங்கப்பட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பானது 2017ல் எட்டு உறுப்பு நாடுகளை கொண்ட அமைப்பானது.
உறுப்பு நாடுகள்:
சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான்.
2022 மாநாடு:
கொரானா காலக்கட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வீடியோ கான்பரசிங் மூலம் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு உஸ்பெகிஸ்தானின் சாமர்கண்டில் தலைவர்கள் நேரடியாக பங்கேற்று மாநாட்டை நடத்துகின்றனர்.
இரண்டு பிரிவினர்:
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பார்வையாளர்கள்.
பாகிஸ்தான் -ரஷ்யா:
உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் நேற்று நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டையொட்டி, பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்துப் பேசினார். சந்திப்பின் போது, ஷெரீப் தனது இயர்போனை காதில் இணைக்க முயன்றபோது இணைக்க முடியாமல் கஷ்டப்பட்டார்.
ஷெரீஃப் அவரது இயர்போன்களை பொருத்துவதில் சிக்கல் ஏற்பட்டதால் "யாராவது எனக்கு உதவ முடியுமா?" என உதவிக்கு அழைத்தார். புதின் அதை சிரித்தபடியே பார்த்து கொண்டிருந்தார்.
Pak PM Shehbaz becomes laughing stock as he struggles with headphones during bilateral meeting with Putin
— ANI Digital (@ani_digital) September 16, 2022
Read @ANI Story | https://t.co/KoqRaqkiJo#ShehbazSharif #VladimirPutin #SCOSummit2022 pic.twitter.com/fNpqiwBJ9d
இருதரப்பு பேச்சுவார்த்தை:
பாகிஸ்தானிடம் தேவையான உள்கட்டமைப்புகள் ஏற்கனவே உள்ளதால், ரஷ்யாவால் எரிவாயுவை வழங்க முடியும் என்று புதின் ஷெரீப்பிடம் கூறியுள்ளார். ரஷ்யாவிலிருந்து பாகிஸ்தானுக்கு குழாய்வழி எரிவாயு விநியோகம் பற்றிய பிரச்சனை குறித்து புதின் பேசும்போது “ ரஷ்யா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் வழியே உள்கட்டமைப்பின் ஒரு பகுதி ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளது. ஆப்கான் பிரச்சினையை தீர்க்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.