
கடந்த 2015ம் ஆண்டு ஜானிடெப் மற்றும் அமெரிக்க நடிகை ஆம்பர் ஹெர்ட் ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
அதன்பின் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 15 மாதங்களில் விவாகரத்து பெற்ற நிலையில், 2018 ஆம் ஆண்டில் ஜானி டெப் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து ஆம்பர் ஹெர்ட் கட்டுரை வெளியிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த டெப், ஆம்பர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்து, 380 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டிருந்தார்.
இந்தநிலையில் இந்த வழக்கில் ஜானிடெப்புக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் அவருக்கு 10 மில்லியன் டாலரை இழப்பீடு தொகையாகவும், 5 மில்லியன் டாலரை தண்டனைக்குரிய இழப்பீடு தொகையாகவும் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.