கொரோனா வைரஸ் சீனாவின் வூகான் சந்தையிலிருந்து வெளியேறியதாக தகவல் வெளியான நிலையில், அதன் உண்மை தன்மையை ஆராய உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு கடந்த ஜனவரி மாதம் முதற்கட்ட ஆய்வினை நடத்தியது. அதன் முடிவில், வவ்வால்கள் மூலம் மனிதர்களுக்கு தொற்று பாதித்து உலகெங்கும் பரவியிருக்கலாம் என கூறப்பட்டது. அதற்கான உறுதிப்பட தகவல் இல்லாதிருந்தும், சீனா தான் இந்த வைரஸை பரப்பியதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றஞ்சாட்டியது.