பூங்கா பராமரிப்பாளருக்கு முத்தமழை பொழிந்த கழுதைப்புலி...
அமெரிக்காவில் கழுதைப்புலி ஒன்று விலங்கியல் பூங்கா பராமரிப்பாளருக்கு முத்த மழை பொழிந்த வீடியோ வெளியாகி பலரையும்உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 155-வது பிறந்தநாளை ஓட்டி, டெல்லியில் உள்ள நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
மகாத்மா காந்தியின் 155-வது பிறந்தநாளையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. இந்த நிலையில், நினைவிடத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோரும் மரியாதை நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதனிடையே, காந்தி ஜெயந்தி நாளில் அவருக்கு தலை வணங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மகாத்மாவின் கற்பனைகள் நமது பாதையை ஒளியூட்டி வருவதாக குறிப்பிட்டுள்ளார். அவருடைய சிந்தனைகள் உலகமயமானது என்றும் ஒற்றுமை மற்றும் இரக்கத்தை வளர்க்க அனைவரையும் ஊக்கப்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பிறந்த நாளை ஓட்டி, அவருக்கும் எக்ஸ் தளத்தில் மரியாதை செலுத்தியுள்ளார். அவரது எளிமை மற்றும் நாட்டிற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றை நினைவுகூர்வதாகவும், ஜெய் ஜவான் ஜெய் கிசான் முழக்கம் இன்றளவும் எதிரொலிப்பதாகவும் கூறியுள்ளார். சவாலான காலத்தில் இந்தியாவின் முன்னேற்றத்திற்கும் தலைமைத்துவத்திற்கு அவர் ஆற்றிய அர்ப்பணிப்பு முன்மாதிரியானது என்றும் பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்.
நிஜ்ஜார் கொலை விவகாரத்தில் முக்கிய தகவல்களை கனடா பகிர்ந்தால், அதை விசாரிக்க தயார் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
ஐந்து நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள ஜெய்சங்கர் வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கனடாவில் இந்தியாவின் தூதர்கள் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருவதாகவும் அதன் காரணமாகவே கனடா நாட்டிற்கான விசா சேவையை ரத்து செய்துள்ளதாகவும் கூறினார்.
கனடா அரசுடன் கடந்த சில ஆண்டுகளாகவே பிரச்சினை இருந்து வந்துள்ளதாகவும் தெரிவித்த ஜெய்சங்கர், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பான எந்தவொரு ஆதாரத்தையும் கனடா வழங்கவில்லை என்று கூறினார்.
வியன்னா தீர்மானத்தின் படி ஒவ்வொரு நாடும் அந்நாட்டில் உள்ள பிற நாடுகளின் தூதரகத்திற்கு பாதுகாப்பு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறிய ஜெய்சங்கர், ஆனால் கனடாவில் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு சமூக ஊடகப் பதிவுகள் மற்றும் போராட்டக்காரர்களால் மிரட்டப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
இதையும் படிக்க || போர்ச்சுகல் நாட்டை சேர்ந்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை!!
நாகையை சேர்ந்த மீனவர்கள் வழக்கம் போல் மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்ற போது இலங்கை கடற்கொள்ளையர்கள் அவர்களை தாக்கிய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய எல்லையில் மீன்பிடிக்கும் தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்துவது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில் வேளாங்கண்ணியை அடுத்த செருதூர் கிராமத்தை சேர்ந்த சபாபதி என்பவரது விசைப்படகில், அவருடைய மகன்கள் பிரதீப், பிரகாஷ், பிரவின், திருமுருகன் உள்ளிட்ட 4 பேர் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர்.
இந்திய எல்லையான பத்து நாட்டில்கள் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை கடற்கொள்ளையர்கள், 4 மீனவர்களையும் பயங்கரமாக தாக்கிவிட்டு கத்தி முனையில் மீன்கள் மற்றும் தளவாட பொருட்களை கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
அப்போது நாகை மீனவர்கள் அங்கிருந்து தப்பிக்க முயன்றபோது அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இலங்கை கடற்கொள்ளையர்கள் கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர். மேலும் 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வலை, 50 ஆயிரம் மதிப்புள்ள மீன்கள், ஜிபிஎஸ் கருவி , 4 செல்போன்களையும், பறித்துகொண்டு தப்பியோடினர் .
பின்னர் செருதூர் கரைக்கு திரும்பிய மீனவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவத்திற்கு மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாகை மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிக்க || கூட்டணி குளறுபடி: "அண்ணாமலையின் மறைமுக மிரட்டலுக்கு அதிமுக அஞ்சாது"-ஜெயக்குமார்!!
ஐ.நா. பொது சபையில் காஷ்மீர் விவகாரங்களை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா கடுமையான கண்டனங்களை தெரிவித்து உள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொது சபையின் 78-வது கூட்டத்தொடரின் போது பேசிய பாகிஸ்தானின் பொறுப்பு பிரதமர் அன்வாரூல் ஹக் காக்கர், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு இடையே அமைதி ஏற்பட காஷ்மீர் விவகாரம் முக்கியம் எனத் தெரிவிதுள்ளார்.
காஷ்மீர் விவகாரங்களை பற்றி ஐ.நா. பொது சபையில் எழுப்பியதற்காக, ஐ.நா. பொது சபையின் இரண்டாவது குழுவுக்கான இந்தியாவின் முதன்மை செயலாளர் பெடல் கெலாட் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், இந்தியாவின் ஆக்கிரமிப்பு பகுதிகளை பாகிஸ்தான் காலி செய்து வெளியேற வேண்டும் என்றும் எல்லை கடந்த பயங்கரவாதம் நிறுத்தப்பட வேண்டும் என்றும் பயங்கரவாதத்திற்கான கட்டமைப்புகளை அந்நாடு உடனடியாக மூட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிக்க || "நாட்டுக் கோழியைப் பெருக்க நடவடிக்கை" அனிதா ராதாகிருஷ்ணன்!!
காலிஸ்தான் தீவிரவாதி விவகாரம் தொடர்பாக கனடா, இந்தியா நட்புறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
தீவிரவாதி ஹர்தீப்சிங் நிஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவின் பேரில் இந்தியத் தூதர் வெளியேற்றப்பட்டார்.
இதன் எதிரொலியாக கனடா தூதரை 5 நாட்களில் இந்தியாவை விட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில் கனடாவில் இந்திய விரோத நடவடிக்கைகள் அதிகரித்து வருவதால் கனடாவுக்கு பயணம் செய்வதை இந்தியர்கள் தவிர்ப்பதோடு அந்நாட்டுவாழ் இந்திய மாணவர்கள் பாதுகாப்புடன் இருக்குமாறும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தூதர்கள் வெளியேற்ற விவகாரம் எதிரொலியாக கனடா பாடகர் சுப்னீத் சிங்கின் இந்திய மேடைநிகழ்ச்சி ரத்து செய்யப்படுள்ளது. இந்நிலையில் பஞ்சாப், ஜம்முகாஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இசைநிகழ்ச்சி நடத்தவிருந்த சுப்னீத் சிங்கின் இந்தியப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Singer Shubhneet Singh’s Still Rollin Tour for India stands cancelled. To that end, BookMyShow has initiated a complete refund of the ticket amount for all consumers who had purchased tickets for the show. The refund will be reflected within 7-10 working days in the customer's…
— BookMyShow (@bookmyshow) September 20, 2023
இதனால், இதற்கான டிக்கெட் தொகையை 10 நாட்களுக்குள் திருப்பி அளிப்பதாக Book my show "எக்ஸ்" தளத்தில் பதிவிட்டுள்ளது.