படிக்க மறந்து ஒரு பையனுக்காக போட்டி போட்ட இரு மாணவிகள்...

ஆந்திரத்தில் ஒரு ஆணுக்காக இரு பெண்கள் மாறி மாறி தலை முடியினை பிடித்துக் கொண்டு சண்டையிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

படிக்க மறந்து ஒரு பையனுக்காக போட்டி போட்ட இரு மாணவிகள்...

ஆந்திர மாநிலத்தில் அனகாபல்லி பகுதியில் இளைஞர் மாணவி ஒருவருடன் சென்றுள்ளார்.இதனை பார்த்த மற்றொரு பெண் அந்த மாணவியிடம் சென்று கேள்விகளை எழுப்பியுள்ளார்.அது வாக்குவாதமாக தொடர்ந்துள்ளார். 

இதனால், இருவருக்கும் குடிமிப்பிடி சண்டை வந்தது. இருவரும் சரமாரியாக அடித்துக்கொண்டனர். அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே அப்பகுதிக்கு வந்த அதிகாரிகள் இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில், வெவ்வேறு பள்ளியில் படிக்கும் 12 ம் வகுப்பு மாணவிகள் என்பது தெரியவந்தது. இருவரையும் எச்சரித்த அனுப்பிய நிலையில், அந்த இளைஞரிடம் விசாரித்து வருகின்றனர்.