மகிந்த ராஜபக்சே வெளிநாட்டிற்கு தப்பி செல்ல திட்டமா? - விமான நிலையத்தை முற்றுகையிட்ட மக்களால் பரபரப்பு

இலங்கை பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மகிந்த ராஜபக்சே, வெளிநாடுக்கு தப்பி செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து போராட்டக்காரர்கள் விமான நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
மகிந்த ராஜபக்சே வெளிநாட்டிற்கு தப்பி செல்ல திட்டமா? - விமான நிலையத்தை முற்றுகையிட்ட மக்களால் பரபரப்பு
Published on
Updated on
1 min read

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுவதால், அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். நேற்று மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தினர்.

இதனால் இலங்கையில் வன்முறை வெடித்தது. இதனிடையே மருத்துவ சிகிச்சை என்ற பெயரில் மகிந்த ராஜபக்சே வெளிநாடு தப்பி செல்ல உள்ளதாக தகவல் கசிந்ததை அடுத்து, கொழும்பு விமான நிலையத்தை மக்கள் முற்றுகையிட்டுள்ளனர். மேலும் அதிபர் பதவியிலிருந்து கோத்தபய ராஜபக்சேவும் பதவி விலக மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். 
  .

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com