கணவனை இழந்து 52 வயதில் மறுமணம் செய்த தாய்...பழைய பஞ்சாங்கத்தை தூக்கி கிடாசிய மகன்...வைரலாகும் போட்டோ!

கணவனை இழந்த பெண் 52 வயதில் தனது குடும்ப நண்பரை  திருமணம் செய்த நிகழ்வு பலரது பாராட்டையும் பெற்றுள்ளது. 

கணவனை இழந்து 52 வயதில் மறுமணம் செய்த தாய்...பழைய பஞ்சாங்கத்தை தூக்கி கிடாசிய மகன்...வைரலாகும் போட்டோ!

பொதுவாக நம்முடைய தமிழ் கலாச்சாரத்தில் பெண்கள் மறுமணம் செய்து கொள்வதை அனைவராலும்  ஏற்றுக்கொள்ளமுடியாத நிலைமை தான்  இன்றளவும் இருந்து வருகிறது. இருப்பினும் ஆங்காங்கே பிள்ளைகள், குடும்பத்தினர் துணையோடு பெண்கள் மறுமணம் செய்து வருவது பலரது பாராட்டையும் பெற்று வருகிறது. அந்தவகையில் துபாயைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்  தனது தாய் 52 வயதில் மறுமணம் செய்து கொண்டதை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அந்த செய்தி மக்களிடம் நல்ல பாராட்டை பெற்று வருகிறது.

துபாயில் வசிக்கும் ஜிமீத் காந்தி என்பவர் 2013 ஆம் ஆண்டு தனது கணவனை இழந்துள்ளார். தன்னுடைய 44 வயதில் கணவனை இழந்த ஜிமீத் காந்திக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு 3 ஆம் நிலை மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அதற்கு பிறகு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். பலமுறை கீமோ தெரபி சிகிச்சை எடுத்துக்கொண்ட அவர் 2 வருட போராட்டத்திற்கு பிறகு கேன்சரில் இருந்து மீண்டுள்ளார். 

இதனையடுத்து வயது, மரபு போன்ற பழங்கால காரணங்களையெல்லாம் கடந்து தனது 52 வது வயதில் குடும்ப நண்பர் ஒருவரை மறுமணம் செய்திருக்கிறார் எனது அம்மா என்று குறிப்பிட்டுள்ளார். ஒரு புள்ளையாக இருந்து பழைய கலாச்சாரங்களை எல்லாம் பொருட்டாக நினைக்காமல் தூசி போல் தட்டிவிட்டு தனது தாயின் மறுமணம் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளது வரவேற்க தக்க ஒன்றாக இருக்கிறது. 

மேலும்,  கணவனை இழந்த பெண் 52 வயதில் தனது குடும்ப உறுப்பினரை மறுமணம் செய்திருப்பதை பலரும் பாராட்டி, அந்த தம்பதியினரை வாழ்த்தி வருகின்றனர்.