எல்லாம் கை மீறி போச்சு... இலங்கை பொருளாதார அவசர நிலை பிரகடனத்திற்கு பாராளுமன்றத்தில் ஒப்புதல்…  

இலங்கை மக்களின் அன்றாட உணவுப் பொருட்களை பதுக்கி வைத்து பற்றாக்குறை ஏற்படுவதை  கட்டுப்படுத்த அவசரகால சட்டம் கொண்டுவரப்பட்டதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
எல்லாம் கை மீறி போச்சு... இலங்கை பொருளாதார அவசர நிலை பிரகடனத்திற்கு பாராளுமன்றத்தில் ஒப்புதல்…   
Published on
Updated on
1 min read

இலங்கை மக்களின் அன்றாட உணவுப் பொருட்களை பதுக்கி வைத்து பற்றாக்குறை ஏற்படுவதை  கட்டுப்படுத்த அவசரகால சட்டம் கொண்டுவரப்பட்டதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை ஒழுங்குபடுத்தும் வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலை தொடர்பாக அந்நாட்டு பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,  மக்களின் அவலங்களை அரசியலாக்குவதும், அரசியலுக்காக மக்களை அவலங்களுக்கு உள்ளாக்குவதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார். 

கொரோனா எனும் நோயில் இருந்து மக்களைக் பாதுகாப்பதற்கு அரசியல் பேதங்களைக் கடந்து அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அப்போது அழைப்பு விடுத்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com