சீனாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா... கவலையில் இருக்கும் சீன மக்கள்...
உலகிலேயே முதன்முறையாக இனம் காணப்பட்ட சீனாவில் கடந்த சில தினங்களாக மீண்டும் கொரோனா பரவல் தலைகாட்டத் துவங்கியுள்ளதால் அங்கு வசிப்போர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

மாலத்தீவு நாடாளுமன்றத்தின் சபாநாயகர், ஜனாதிபதி மொஹமட் நஷீத், இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பான புகலிடத்தை வழங்க முன்வந்ததாக மாலைத்தீவின் The Maldives Journal என்ற சஞ்சிகை தெரிவித்துள்ளது.
நஷீத் தற்போது இலங்கையில் அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் உயர்மட்ட அரசியல் பிரமுகர்களுடன் பல சந்திப்புகளை நடத்தி, ராஜபக்ச குடும்பத்தை மாலத்தீவுக்கு பாதுகாப்பான வழியில் அனுமதிப்பதற்காக அவர்களை நஷீத் வலியுறுத்தினார் என்றும் மாலத்தீவு பத்திரிகை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மாலத்தீவு சஞ்சிகையில் வெளியாகியுள்ள இந்த தகவல்கள் குறித்து மகிந்த ராஜபக்சவின் தரப்பு இதுவரை எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.
உலக சுகாதார அமைப்பின் கமிட்டி பி தலைவராக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
75-வது உலக சுகாதார அமைப்பின் மாநாடு சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெற்று வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்த கூட்டத்தில், உலக தலைவர்கள் பலர் கலந்து கொண்டு சுகாதாரம் சார்ந்த விவகாரங்கள் குறித்து ஆலோசித்ததோடு, நாடுகளின் சுகாதாரத்தை பேணி காக்க உதவியவர்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறது.
இதனைத்தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், உலக சுகாதார அமைப்பின் கமிட்டி பி தலைவராக மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ரஷ்ய அதிபர் புதினை போல் அல்லாமல், குற்றவாளிகளை மட்டுமே தான் கொலை செய்வதாக பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியூடெர்ட் கடுமையாக விமர்சித்துள்ளார்.
புதினின் நெருங்கிய நண்பராக கூறப்படும் இவர், முதன்முறையாக அவருக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் அமைச்சர்களுடனான ஆலோசனை கூட்டத்தின் தொலைக்காட்சி ஒளிப்பரப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்த 3 மாத போரால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும் பலர் ரஷ்யா அதிபரும், தானும் பலரை கொன்று குவிப்பதாக கூறி வரும் நிலையில், அப்பாவி மக்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவதாகவும், ஆனால் தனது அரசு குழந்தைகள், முதியவர்களை விடுத்து குற்றவாளிகளை மட்டுமே கொலை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
போர் தொடங்கி முழுதாக 3 மாதங்கள் நிறைவடைந்த நிலையில், எதிர்காலம் குறித்த கேள்விகளுடன் உக்ரைன் மக்கள் வெளிநாடுகளில் அகதிகளாக அடைந்து கிடக்கும் அவல நிலை நீடிக்கிறது.
கடந்த பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தொடங்கிய போது ஓரிரு நாட்கள் அல்லது ஓரிரு வாரங்களில் போர் முடிவுக்கு வந்து விடும் என்று உலகம் எதிர்பார்த்தது. உக்ரைன் மக்களும் இப்போதைக்கு உயிரை மட்டும் காப்பாற்றிக் கொள்வோம் என அண்டை நாடுகளுக்கு அகதிகளாக படையெடுத்தனர்.
ஆனால் 3 மாதங்களாகியும் போர் நிற்காததுடன் தங்கள் வாழ்விடங்கள் முழுமையாக அழிக்கப்படும் காட்சிகளை பார்த்து கண்ணீர் விட்டு கதறுகின்றனர். மேலும் தஞ்சம் கொடுத்த நாடுகளிலும் பிரச்சினைகள் எழத் தொடங்கியுள்ளன. பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகளாக இருக்கும் அகதிகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட நீண்ட கால உதவிகள் வழங்குவதில் பெரும் சிக்கல் இருப்பதாக போலந்து உள்ளிட்ட நாடுகள் புலம்புகின்றன.
சொந்த நாடு திரும்ப முடியாத நிலையில் தஞ்சமடைந்த நாடுகளிலும் தவித்து வருகின்றனர் உக்ரைன் மக்கள். 18 முதல் 60 வயதுக்குட்பட்ட ஆண்கள் நாட்டை விட்டு வெளியேற உக்ரைன் அரசு தடை விதித்த நிலையில் குடும்ப ஆண் உறுப்பினர்களின் நிலை தெரியாமல் நாளும் கண்ணீர் வடித்து வருகின்றனர். மேற்குலகின் பேச்சை நம்பி ரஷ்யாவுடனான போரை அதிபர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து வரும் நிலையில் எதிர்காலம் தெரியாத இருளில் உறைந்து கிடக்கின்றனர் உக்ரைன் மக்கள்..
ரஷ்யாவின் முக்கிய உள்கட்டமைப்புகளுக்கான பொருட்களுக்காக மேற்குல நாடுகளை சார்ந்திருப்பதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரவ் வலியுறுத்தியுள்ளார்.
தொழில்துறை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கான எந்த ஒரு பொருளையும் மேற்குலகிடம் இருந்து எதிர்பார்ப்பதை முழுமையாக நிறுத்த வேண்டும் என்றார்.
மீண்டும் உறவுகளைத் தொடர்வது குறித்து மேற்குலகம் ஏதாவது முன்மொழிந்தால் அப்போதும் ரஷ்யா இரு முறை யோசித்துத்தான் முடிவெடுக்கும் என்றும் குறிப்பிட்டார். நம் மீதான நம்பிக்கையை நிரூபித்த நாடுகளுடன் மட்டுமே ரஷ்யா என்றும் நட்பு பாராட்டும் என்றும் செர்ஜி லாவ்ரவ் தெரிவித்தார்.