ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ரஷ்யா கொடுத்த பதிலடி...!

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ரஷ்யா கொடுத்த பதிலடி...!

ஐரோப்பிய ஒன்றியத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையில் ரஷ்யா நாள்தோறும் அதிக அளவிலான இயற்கை எரிவாயுவை எரித்து வீணாக்குவதாக நார்வே விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

எரிவாயு அளவை குறைத்த ரஷ்யா:

உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுத உதவி, ரஷ்யா மீது அடுத்தடுத்து பொருளாதாரத் தடை என்ற வகையில் செயல்படும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பதிலடி தரும் விதமாக Nord Stream 1 குழாய் வழி எரிவாயு அளவை ரஷ்யா அதிரடியாகக் குறைத்தது. இதனால் ஐரோப்பா முழுவதும் மின்தடை மற்றும் எரிசக்தி தட்டுப்பாடு பரவலாக இருந்து வருகிறது.  

அதிகளவில் இயற்கை எரிவாயு எரிப்பு:

இந்தநிலையில், பின்லாந்து எல்லையை ஒட்டியுள்ள போர்டோவாயாவில் உள்ள ரஷ்யாவின் காஸ்ப்ரோ கம்ப்ரசர் ஆலையில் மிகப்பெரிய அளவில் இயற்கை எரிவாயு எரிக்கப்படுவதை செயற்கைகோள் புகைப்படங்கள் காட்டுவதாக நார்வேயின் ரைஸ்டாட் எனர்ஜி ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். நாள்தோறும் சுமார் 4 புள்ளி 34 மில்லியன் கன மீட்டர் எரிவாயு எரிக்கப்படுவதாகவும்,  அதன் மதிப்பு 10 மில்லியன் டாலர் என்றும் மதிப்பிட்டுள்ளனர்.

மேலும் படிக்க: https://www. malaimurasu.com/posts/cover-story/You-cant-imagine-how-scared-we-were-Taraiya-Massacre-Justice-will-be-served

சுற்றுச்சூழல் பேரழிவு எச்சரிக்கை:

தொடர்ந்து, எரிவதற்கான சரியான காரணங்கள் தெரியவில்லை என்றாலும், எரிபொருளின் அளவு, உமிழ்வுகள் மற்றும் இருப்பிடம் ஆகியவை ஐரோப்பாவின் எரிவாயுத் தட்டுப்பாட்டை அதிகரிப்பதுடன் சுற்றுச்சூழல் பேரழிவையும் ஏற்படுத்தும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.