9 மீனவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.. கதறி அழுது கோரிக்கை எழுப்பும் மீனவப் பெண்கள்!!

9 மீனவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.. கதறி அழுது கோரிக்கை எழுப்பும் மீனவப் பெண்கள்!!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9 மீனவர்களையும் பறிமுதல் செய்யப்பட்ட அவர்களின் படகையும் மீட்டுத் தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாகை மாவட்ட மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

9 மீனவர்கள் கைது

அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கீச்சாங்குப்பத்தை சேர்ந்த நாகேந்திரன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் கடந்த 6-ம் தேதி கடலுக்குச் சென்ற 9 மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தது படகு மற்றும் வலைகள் உள்ளிட்ட மீன்பிடி கருவிகளையும் பறிமுதல் செய்தது.

நாகை மாவட்ட மீனவர்கள் கோரிக்கை

கைது செய்யப்பட்ட மீனவர்கள் திரிகோணமலை மைலாடி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ள நிலையில், அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க நாகை மாவட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 10 குடும்பங்களும் அந்த படகை நம்பித்தான் உள்ளதாகவும், அதனால் படகையும் மீட்டுத் தர வேண்டும் என்றும் மீனவப் பெண்கள் கதறினர்.

மீனவர்கள் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை

இது வரை நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 8 படகுகள் இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவற்றையும் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீனவர்கள் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.