இதுகுறித்து வெளியான அந்த வீடியோவில், தென் கொரியாவை சேர்ந்த ஒருவர் வீட்டை நம்பர் லாக் பூட்டில் பூட்டி விட்டு வெளியே செல்கிறார். இதையடுத்து அவர் வீட்டிற்கு பூனை ஒன்று வந்து உணவை சப்பிட்டுவிட்டு செல்கிறது. அதாவது வீட்டின் உரிமையாளர் போட்ட நம்பர் லாக்கை தனது காலால் அழுத்தி வீட்டை திறந்து உள்ளே செல்கிறது. பின்னர் வீட்டில் இருக்கும் உணவுகளை தேடி சாப்பிடுகிறது. இந்த நிகழ்வு குறித்து பேசிய வீட்டின் உரிமையாளர், பல முறை பூனையை விரட்டினாலும் மீண்டும் மீண்டும் தனது வீட்டிற்கு வரும் அந்த பூனை தங்களது தெருவில் சுற்றித்திரிவதாக தெரிவித்தார்.