நீர்வீழ்ச்சியில் விழ இருந்த இருவரை தலைப்பாகையை கொண்டு காப்பாற்றிய சீக்கியர்கள்

கனடாவில் மலைபாதை சரிந்து நீர்வீழ்ச்சியில் விழ இருந்த இருவரை சீக்கியர்கள் தங்கள் தலைப்பாகையை  கொண்டு காப்பாற்றிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
நீர்வீழ்ச்சியில் விழ இருந்த இருவரை தலைப்பாகையை கொண்டு காப்பாற்றிய சீக்கியர்கள்
Published on
Updated on
1 min read

கனடாவில் மலைபாதை சரிந்து நீர்வீழ்ச்சியில் விழ இருந்த இருவரை சீக்கியர்கள் தங்கள் தலைப்பாகையை  கொண்டு காப்பாற்றிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

கனடாவில் புகழ் பெற்ற சுற்றுலா தலமான கோல்டன் இயர் மாகாண பூங்கா பகுதியில் ஆர்ப்பரித்து ஓடும் நீர்வீழ்ச்சி பகுதியில் பக்கவாட்டு மண் சரிந்ததால், நீர்வீழ்ச்சியில் விழ இருந்த இருவரை எவ்வாறு காப்பாற்றுவது என  கூட்டத்தினர் தவித்துள்ளனர். அப்போது நொடி பொழுதில் அங்கிருந்த 5 சீக்கியர்கள் தங்களது தலைபாகையை கழற்றி அதனை ஒன்றாக இணைத்து நீண்ட கயிறு போல் செய்து அதன் மூலம் இருவரையும் காப்பாற்றியுள்ளனர்.

இதன் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. சீக்கியர்களின் இந்த மனிதாபிமான செயலுக்கு இணையத்தில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

A video of the incident on Monday, in which five Sikh hikers tied their dastaars (turbans) together to save a man who had slipped and fallen at the Lower Falls at Golden Ears Park. Video courtesy @globalnews

Kudos to these young men on their quick thinking and selflessness. pic.twitter.com/XQuX27OH5i

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com