தொடர்ந்து பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் இலங்கை பொதுமக்கள், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் மாளிகை போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டு கைப்பற்றப்பட்டது. நேற்று கைப்பற்றப்பட்ட அந்த மாளிகையில், போராட்டக்காரர்கள் ஒரு சிலர் தங்கி மாளிகைப் பொருட்களைப் பயன்படுத்தியும், அங்கு தங்கியும் வருகின்றனர். இரண்டாவது நாளாக இன்றும் அங்குள்ள குளியல் அறை, நீச்சல் குளங்களில் குளித்து மகிழ்ந்ததுடன், உடற்பயிற்சி கூடத்தில் நுழைந்து உடற்பயிற்சி செய்தனர் போராட்டக்காரர்கள். குடும்பம் குடும்பமாக சுற்றுலாத் தலத்தை பார்வையிடுவது போல பொதுமக்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சே மாளிகையை பார்வையிட்டு அங்குள்ள வசதிகளை அனுபவித்து வருகின்றனர்.