ரணிலும் பதவி விலகும் வரை இலங்கையில் போராட்டம் தொடரும்...போராட்டக்காரர்கள் அறிவிப்பு!

ரணிலும் பதவி விலகும் வரை இலங்கையில் போராட்டம் தொடரும்...போராட்டக்காரர்கள் அறிவிப்பு!

Published on

ரணில் விக்ரமசிங்க தற்காலிகமாக கூட நாட்டின் அதிபராக பதவிக்கு வந்ததை போராட்டகாரர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என மாற்றத்திற்கான இளையோர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க பதவி விலகும் வரை போராட்டம் தொடர்ந்தும் நடத்தப்படும். கோட்டாபய ராஜபக்ச, தனது பாதுகாப்புக்காக ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்தார். இலங்கையிலிருந்து விரட்டப்பட்டுள்ள கோத்தபய ராஜபக்சே பதவி விலகிய பின்னர் ரணில் இடைக்கால அதிபராக பதவிக்கு வந்துள்ளார். மக்களின் தேர்ந்தெடுத்து அவர் அந்த பதவிக்கு வரவில்லை.

ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டமைக்கு கடும் எதிர்ப்பு இருந்து வந்தது. இதனால், தற்காலிகமாக கூட ரணில் அதிபராக பதவியில் இருப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அவர் உடனடியாக பதவி விலக வேண்டும். அவர் விலகிய பின்னர் அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளபடி நடவடிக்கைகளை மேற்கொள்ள இடமளிப்போம்.

ரணில் விக்ரமசிங்கவை விரட்டும் வரை நாங்கள் காலிமுகத்திடலில் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்போம் எனவும் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்.லஹிரு வீரசேகர இலங்கையின் முக்கிய மாணவர் அமைப்பான அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com