ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றம்!

இலங்கை மீதான போர்க்குற்றங்களுக்கு உள்நாட்டு பொறியமைவின் கீழ் தீர்வு காண எதிர்பார்த்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றம்!

மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் 13 வாக்குகள் பெற்று நிறைவேற்றப்பட்டது. 

தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்கெடுப்பு

இலங்கை மீதான தீர்மானத்திற்கு ஆதரவாக 20 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டன. பொலிவியா சீனா, கியூபா, எரித்திரியா, பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், வெனிசூலா ஆகிய 7 நாடுகளும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்திருந்தன. 

இந்தியா கலந்துகொள்ளவில்லை

அத்துடன், ப்ரான்ஸ், ஜேர்மன், நெதர்லாந்து, தென் கொரியா, உக்ரைன், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. இந்த வாக்களிப்பில், இந்தியா, ஜப்பான், பிரேசில், கட்டார் ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட 20 உறுப்பு நாடுகள் கலந்துகொள்ளவில்லை. 

உள்நாட்டு சட்டப்படியே தீர்வு 

இதேவேளை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இன்று இடம்பெறும் இலங்கை தொடர்பான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புக்கு முன்னர் இடம்பெற்ற  பொது நிகழ்வில் வெளியுறவு அமைச்சர் கருத்து வெளியிட்டிருந்தார்.

அதில் இலங்கை மீதான போர்க்குற்றங்களுக்கு உள்நாட்டு பொறியமைவின் கீழ் தீர்வு காண எதிர்பார்த்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். இறையாண்மை கொண்டதொரு நாட்டில் சர்வதேச தலையீடுகள் அவசியமற்றது எனவும், இலங்கை மீதான குற்றச்சாட்டுகளை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்ல முடியாது என்று தெரிவித்தார் வெளியுறவு அமைச்சர். உள்நாட்டு பொறிமுறையின் கீழ் தீர்காண்பதே பொருத்தமானது என்றும் தெரிவித்தார்.

தீர்மானத்தை நிராகரித்த இலங்கை

சாட்சியங்களை சேகரிப்பது தொடர்பிலான வெளிக்கள பொறிமுறையொன்று இந்த தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதால், தாம் இந்த தீர்மானத்தை நிராகரிப்பதாக வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். அத்துடன், தீர்மானத்தின் 8 ஆவது சரத்தை முழுமையாக எதிர்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.