ரணில் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவார்...அமெரிக்கா சொல்வது உண்மையா?

இலங்கைக்கு அமெரிக்க அரசாங்கம் தொடர்ச்சியாக வழங்கி வரும் ஆதரவைப் பாராட்டிய அதிபர் ரணில் விக்ரமசிங்க அதற்கு நன்றியும் தெரிவித்தார்.

ரணில் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவார்...அமெரிக்கா சொல்வது உண்மையா?

கடன் மறுசீரமைப்பு தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில் இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான உதவி அரசுச் செயலாளர் டொனால்ட் லு தெரிவித்தார்.

அமெரிக்காவுக்கு ரணில் நன்றி தெரிவித்தார்

அதிபர் ரணில் விக்ரமசிங்க அவர்களை  சந்தித்த போதே   டொனால்ட் லு இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சந்திப்பு அக்டோபர் 19 அன்று பிற்பகல் அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றதுடன், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மற்றும் அரசியல் மற்றும் பொருளாதார ஆலோசகர் சூசன் வோல்கே ஆகியோரும் கலந்துகொண்டனர். இலங்கைக்கு அமெரிக்க அரசாங்கம் தொடர்ச்சியாக வழங்கி வரும் ஆதரவைப் பாராட்டிய அதிபர் ரணில் விக்ரமசிங்க அதற்கு நன்றியும் தெரிவித்தார்.

பொருளாதார நிலைத்தன்மை

இலங்கையில் அமைதியான சூழலை ஏற்படுத்தியதற்காக ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த உதவி அரசுச் செயலாளர், அதிபர் ரணில் விக்ரமசிங்க அவர்களே சவால்களை வெற்றிகொண்டு நாட்டில் பொருளாதார நிலைத்தன்மையை ஏற்படுத்துவதற்கு மிகவும் பொருத்தமானவர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த இக்கட்டான காலகட்டத்தில், இலங்கைக்கும் அதன் மக்களுக்கும் சகலவிதமான ஆதரவையும் வழங்க  எதிர்பார்ப்பதாகவும், ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கும் நாடுகளுக்கு இடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் எடுத்துள்ள முயற்சிகளைப் பாராட்டுவதாகவும் டொனால்ட் லூ தெரிவித்தார்.