ஹர்திக் பாண்டியா-விடம் இருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள 2 கைக்கடிகாரங்கள் பறிமுதல் ...

துபாயில் இருந்து இந்திய திரும்பிய இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்டியா-விடம் இருந்து சுங்கத்துறை அதிகாரிகள்  5 கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு கைக்கடிகாரங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
ஹர்திக் பாண்டியா-விடம் இருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள 2 கைக்கடிகாரங்கள் பறிமுதல் ...
Published on
Updated on
1 min read

 2021 உலகக் கோப்பை டி 20 தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்து வெளியேறியதை தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் ஊர் திரும்பியுள்ளனர். அதன்படி டி 20 போட்டியில் விளையாடிய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா துபாயில் இருந்து கடந்த ஞாயிற்று கிழமை இரவு மும்பை திரும்பினார்.

அப்போது மும்பை விமான நிலையத்தில் ஹர்திக் பாண்டியா-வின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்ட போது 5 கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு கைக்கடிகாரங்கள் முறையாக ரசீது இல்லாமல் கொண்டுவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com