மல்யுத்தத்தில் வெண்கல பதக்கத்துக்கான ஆட்டத்தில், இந்தியாவின் பஜ்ரங் பூனியா களம் இறங்குகிறார். இதைப்போல ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியின் இறுதி சுற்றிற்கு, இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தகுதி பெற்றுள்ளார். தகுதி சுற்றில் திறமையாக விளையாடி, அனைவரது கவனத்தையும் ஈர்த்த நீரஜ், இறுதிப்போட்டியில் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டுகிறது. இந்திய ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த போட்டி, இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது.