காலிறுதியில் தீபிகா குமாரி... ரஷ்யாவின் செனியா பெரோவாவை வீழ்த்தினார்

ஒலிம்பிக் மகளிர் வில்வித்தை தனிநபர் பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
காலிறுதியில் தீபிகா குமாரி... ரஷ்யாவின் செனியா பெரோவாவை வீழ்த்தினார்
Published on
Updated on
1 min read
டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்படும் இந்திய வீரர், வீராங்கனைகளுள் தீபிகா குமாரியும் ஒருவர். உலக மகளிர் வில்வித்தை தரவரிசையில் முதலிடத்தில் உள்ள தீபிகா குமாரி, காலிறுதிக்கு முந்தைய வெளியேற்றுதல் சுற்று போட்டியில், ரஷ்யாவின் செனியா பெரோவா உடன் மோதினார்.
விறுவிறுப்பான இந்த போட்டியில், இருவரும் தலா 5 புள்ளிகளைப் பெற்றதால் வெற்றியாளரை தேர்வு செய்வதற்காக செட் ஆஃப் சுற்று நடத்தப்பட்டது. இதில் 10 புள்ளிகளை குவித்த தீபிகா குமாரி 6-5 என வெற்றியை வசமாக்கினார். இதன்மூலம் காலிறுதி சுற்றுக்கு தீபிகா தகுதி பெற்றுள்ளார். 
logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com