இறுதிப்போட்டிக்குள் நுழைந்த குஜராத் அணி...!!!

இறுதிப்போட்டிக்குள் நுழைந்த குஜராத் அணி...!!!
Published on
Updated on
1 min read

ஐபிஎல் கிாிக்கெட்டில் மும்பையை வீழ்த்தி குஜராத் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

16-வது சீசன் ஐபிஎல் கிாிக்கெட் போட்டியில் நேற்று நடந்த 2-வது எலிமினேட்டா் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் எதிா்கொண்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி சுப்மன் கில் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 18 புள்ளி 2 ஓவா்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் மும்பை இந்தியன்சை 62 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் இறுதிப்போட்டிக்குள் குஜராத் டைட்டன்ஸ் நுழைந்துள்ளது. நாளை அகமதாபாத்தில் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் அந்த சென்னை சூப்பர் கிங்சை எதிர்கொள்ள உள்ளது. இதில் வெற்றி பெற்று கோப்பையை எந்த அணி கைப்பற்றப்போகிறது என இரு அணி ரசிகா்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனா்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com