
இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரின் செக் குடியரசு வீராங்கணை தெரேசா ஸ்வாபிகோவாவை தோற்கடித்து சாய்னா நேவால் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
கொரோனா பரவலுக்கு மத்தியில் இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் இந்த போட்டிகள் நடைபெறுகின்றன.
இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நேவால், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் இந்த தொடரில் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் செக் குடியரசு வீராங்கணை தெரேசா ஸ்வாபிகோவாவை தோற்கடித்து சாய்னா நெவால் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.