இந்திய அணி வீரர்கள் ‘வந்தே மாதரம்’ பாடலை பாடிய வீடியோவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பகிர்ந்துள்ளார். 9-வது டி-20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய நிலையில், வான்கடே மைதானத்தில் இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் 'மா துஜே சலாம் பாடல் மைதானத்தில் ஒலிக்கவிடப்பட்டது. அந்த பாடலை மைதானத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களுடன் சேர்ந்து இந்திய அணி வீரர்களும் உற்சாகமாக பாடினர்.