இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார் பவினாபென்... இந்தியாவிற்கு ஒரு பதக்கம் உறுதி... 

டோக்கியோ பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் இறுதி சுற்றுக்கு முன்னேறிய பவினாபென் படேல், இந்தியாவிற்கு ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார் பவினாபென்... இந்தியாவிற்கு ஒரு பதக்கம் உறுதி... 
Published on
Updated on
1 min read

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் டேபிள் டென்னிஸ் போட்டியின் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில், இந்திய வீராங்கனை பவினாபென் படேல் அபாரமாக விளையாடி இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.  அரையிறுதி போட்டியில் சீன வீராங்கனை மியா சாங்கை 3 க்கு 2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். 

இறுதி சுற்றுக்கு பவினாபென் படேல் முன்னேறியதன் மூலம் இந்தியாவிற்கு ஒரு பதக்கம் உறுதியாகியுள்ளது. இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை வெற்றி பெற்றால் தங்கப்பதக்கம் உறுதியாகி விடும். தோல்வி அடைந்தால் வெள்ளிப்பதக்கம் கிடைக்கும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com