பஞ்சாப் கிங்ஸ் கேப்டனுக்கு 12 லட்சம் அபராதம்! - முதல் ஓவர்-ரேட் விதிமீறல் என்பதால் ஸ்ரேயாஸ் ஐயருக்கு தண்டனை குறைந்தபட்ச வரம்பாக விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்...

இந்த சீசனில் அணியின் முதல் ஓவர்-ரேட் விதிமீறல் என்பதால், கேப்டனுக்கான தண்டனை குறைந்தபட்ச வரம்பான ₹12 லட்சமாக..
பஞ்சாப் கிங்ஸ் கேப்டனுக்கு 12 லட்சம் அபராதம்! - முதல் ஓவர்-ரேட் விதிமீறல் என்பதால் ஸ்ரேயாஸ் ஐயருக்கு தண்டனை குறைந்தபட்ச வரம்பாக விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்...
Published on
Updated on
1 min read

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி மெதுவான ஓவர் வீசியதற்காக அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

செவ்வாயன்று முல்லன்பூரில் குஜராத் டைட்டன்ஸ் (GT ) அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் 2026 தொடக்க ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் (PPKS) அணி மெதுவான ஓவர் வீசியதன் காரணமாக, அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ₹ 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் நடத்தை விதிகளின் பிரிவு 2.22ன் கீழ் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் அணியின் முதல் ஓவர்-ரேட் விதிமீறல் என்பதால், கேப்டனுக்கான தண்டனை குறைந்தபட்ச வரம்பான ₹12 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. வேகப்பந்து வீச்சாளர் வைஷாக் விஜயகுமார் மற்றும் லெக்-ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் இணைந்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்த, பிபிகேஎஸ் அணி ஜிடி அணியை ஆறு விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது. பேட்டிங்கில் தடுமாற்றம் இருந்தபோதிலும், பஞ்சாப் அணி 19.1 ஓவர்களில் இலக்கைக் கடந்தது. இளம் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் கூப்பர் கொன்னோலி 44 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் எடுத்து அணியை வெற்றிக்கு வழிநடத்தினார்.

இந்நிலையில் மெதுவாக பந்த் வீசியதாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மீது அபராதம் விதிக்கப்பட்டது. ஐபிஎல்-ன் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, இந்தத் தண்டனையானது, குறைந்தபட்ச ஓவர்-ரேட் மீறல்களைக் கையாளும் நடத்தை விதிகளின் பிரிவு 2.22-இன் கீழ் வருகிறது. இது இந்தப் பருவத்தில் பஞ்சாபின் முதல் மீறல் என்பதால், ஸ்ரேயாஸ் ஐயருக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. தங்கள் அணிகள் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் ஓவர்களை முடிப்பதை உறுதி செய்வது அணித் தலைவர்களின் பொறுப்பாகும். அவ்வாறு செய்யத் தவறினால், அபராதம் மற்றும் மீண்டும் மீண்டும் விதிமீறினால் தற்காலிகத் தடை உள்ளிட்ட தண்டனைகள் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com