டோக்கியோ பாராலிம்பிக்... தமிழக வீரர் மாரியப்பன் தலைமையில் வீரர்கள் பங்கேற்பு...

2020 டோக்கியோ பாராலிம்பிக் துவக்க விழாவில் இந்தியா சார்பில் மாரியப்பன், வினோத் குமார் உட்பட 54 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
டோக்கியோ பாராலிம்பிக்... தமிழக வீரர் மாரியப்பன் தலைமையில் வீரர்கள் பங்கேற்பு...
Published on
Updated on
1 min read

மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நாளை கோலாகலமாக தொடங்க உள்ளது. இதில் இந்தியா உள்ளிட்ட 160 நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கணைகள் பங்கேற்கின்றனர்.

இந்தியா சார்பில்  54 வீரர், வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்க உள்ளனர். தடகளம், வில்வித்தை, பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் உள்பட 9 வகையான விளையாட்டுகளில் இந்திய வீரர்கள் களம் காண உள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த உயரம் தாண்டுதல் வீரர் மாரியப்பன் தலைமையில் இந்திய அணி தொடக்க விழா அணிவகுப்பில் பங்கேற்க உள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com