கள்ளக்குறிச்சிக்கு முதலமைச்சர் நேரில் செல்லாதது ஏன்? - பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்

கள்ளக்குறிச்சிக்கு முதலமைச்சர்  நேரில் செல்லாதது ஏன்? - பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்
Published on
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில் முதலமைச்சர் நேரில் செல்லாதது ஏன்? என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சர்வதேச யோகா தினத்தையொட்டி சென்னை அடையாறு நேரு யுவா கேந்திராவில் நடந்த யோகா நிகழ்ச்சியில் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளுங்கட்சியின் துணையோடுதான் கள்ளக்குறிச்சியில் விஷச்சாராய விற்பனை நடைபெற்று வருகிறது, அதிகாரிகளை மாற்றுவது வெறும் கண்துடைப்பு என சாடினார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com