
மேலும் தமிழ்நாட்டில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டுவது அவர்களின் உரிமை அது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றும் சிவகுமார் தெரிவித்தார். இது போன்ற சூழ்நிலைகளை சமாளிப்பதற்காகத்தான் மேகதாது அணை வேண்டும் என்று தாங்கள் கேட்பதாகவும் எல்லைப் பகுதியில் கட்டப்படும் இந்த அணையில் இருந்து தாங்கள் தண்ணீரை திரும்பப் பெற்றுக் கொள்ள முடியாது என்றார்.