பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், குற்றவாளிகளுக்கு சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத் தர காவல் துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
Published on

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து, தனது எக்ஸ் தள பக்கத்தில், பதிவிட்டுள்ள அவர், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ள அவர், கொலையில் சம்பந்தப்பட்டவர்களை காவல் துறை இரவோடு இரவாக கைது செய்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்...

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com