இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்த போதும், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், டி.ஆர்.டி.ஓ கண்டுபிடித்துள்ள மருந்தை விற்பனை செய்தால், மூன்றாம் அலையை எதிர்கொள்ள முடியும் என கருத்து தெரிவித்து, நாளைக்குள் விளக்கமளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.