ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டு மாதங்களுக்கு  144 தடை உத்தரவு....!

ராமநாதபுரம் மாவட்டத்தில்  இரண்டு மாதங்களுக்கு   144 தடை உத்தரவு....!

இமானுவேல் சேகரன் நினைவு தினம், முத்துராமலிங்கம் குருபூஜை ஆகியவற்றை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில்  144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் விஷ்னு சந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் 9ந் தேதி நள்ளிரவு முதல் அக்டோபர் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் விஷ்னு சந்திரன்உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இமானுவேல் சேகரன் நினைவு தினம், முத்துராமலிங்கம் குருபூஜை உள்ளிட்டவைகள் வரவுள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு காரணமாக இந்த 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் 2 மாதங்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. குறிப்பாக செப்டம்பர் 9ந்தேதி முதல்  செப்டம்பர் 15ந்தேதி வரையிலும் மீண்டும் அப்டோபர் 25ஆம் தேதியில் இருந்து  அக்டோபர் மாதம் 31ந் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என குறிப்பிட்டப்பட்டுள்ளது.

மேலும் 144 தடை உத்தரவு அமலில் உள்ள  நாட்களில் வெளிமாவட்டத்தை சேர்ந்த வாடகை வாகனங்கள் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் உரிய அனுமதியின்றி நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடபட்டுள்ளது.

இதையும் படிக்க    |  பல் பிடுங்கிய பல்வீர்சிங் வழக்கு; சிபிசிஐடி குற்றப்பத்திரிகை; கிடப்பில் போட்ட தமிழ்நாடு அரசு?