மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார் அண்ணாமலை....!!!

மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார் அண்ணாமலை....!!!

ஜெயலலிதாவை அவதூறாக பேசி வரும் பாஜகவின் அண்ணாமலைக்கு புகழேந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக விமர்சனம் செய்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அதிமுக செய்தி தொடர்பாளரும் ஓபிஎஸ் ஆதரவாளருமான புகழேந்தி செய்தியாளர்களிடம் பேசினார்.

தகுதியில்லை:

அப்போது, ஜெயலலிதா என்ற மிகப்பெரிய ஆளுமையை தற்பொழுது பாஜகவின் தமிழ்நாடு தலைவராக உள்ள அண்ணாமலை விமர்சித்து பேசி வருகிறார் எனவும் ஜெயலலிதாவை சிறுமைப்படுத்தி அவரைவிட தனது மனைவி நூறு மடங்கு உயர்ந்தவர் என்றும் தாயார் ஆயிரம் மடங்கு உயர்ந்தவர் என்றும் அண்மையில் செய்தியாளர்களிடம் பேசி இருக்கிறார் எனவும் கூறிய புகழேந்தி இதுபோன்று பேசுவதற்கு அவருக்கு எந்த தகுதியும் இல்லை எனவும் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதோடு பாஜகவின் மூத்த தலைவர்கள் அண்ணாமலை போன்றவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

நாவடக்கம்:

மேலும் ஜெயலலிதாவின் ஆளுமை குறித்து உலகமே வியந்து போற்றிய நிலைபாடுகளும் வரலாறும் உண்டு என்று கூறிய அவர் எனவே இது போன்ற பேச்சுக்களை அண்ணாமலை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

மனநலம் பாதிப்பு:

இவ்வாறு பேசி வரும் அண்ணாமலை ஏற்கனவே பல தலைவர்கள் உளவியல் ரீதியாக அண்ணாமலை மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கருத்துக்களை கூறி வரும் வேளையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக மனநலம் பாதிக்கப்பட்டவர் போல இதுபோன்று விமர்சனங்களை வைத்து பேசுகிறார் எனவும் எனவே அவர் ஒரு நல்ல மனநலம் மருத்துவமனையை அல்லது மருத்துவரை அணுகுவது நல்லது எனவும் தெரிவித்துள்ளார்.  எனவே இது போன்ற விமர்சனங்களை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என எச்சரிக்கும் விதமாகவும் பேசியுள்ளார்.

இதையும் படிக்க:   அறிவிப்பு வெளியிட்ட அண்ணா பல்கலைக்கழகம்...!!!