சிவகாசி தொழில் துறையினருக்கு எந்த பிரச்சினை என்றாலும் மத்திய அரசு தீர்க்கும்... ராம்தாஸ் அத்வாலே உறுதி!!

சிவகாசி தொழில் துறையினருக்கு எந்த பிரச்சினை என்றாலும் மத்திய அரசு தீர்க்கும்... ராம்தாஸ் அத்வாலே உறுதி!!

பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவை  வளர்ச்சி பாதையில் முன்னேற்றி வருகிறார். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் சமூகத்தினர், பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்  என அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து செயல்பட்டு வருகிறார்.

தபால் உறை வெளியிடும் விழா:

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் ஸ்ரீ காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் தொழில் நிறுவனங்களின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்திய தபால் துறை சார்பாக  சிறப்பு தபால் உறை வெளியிடும் விழா  நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில்
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறையின் இணை அமைச்சர் ராம்தாஸ்அத்வாலே,  தமிழ்நாடு தென்மண்டல தபால் துறை தலைவர் ஜெய்சங்கர், பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மைய துணை இயக்குனர் வெங்கடேஸ்வர சர்மா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 

தீப்பெட்டி நிறுவனம்:

ஸ்ரீ காளீஸ்வரி குழுமத்தின் நூற்றாண்டு நினைவு அஞ்சல் உரையை தென்மண்டல அஞ்சல் துறை தலைவர் ஜெய்சங்கர் வெளியிட மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பெற்றுக் கொண்டார்.  விழாவில் பங்கேற்ற மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பேசுகையில், சிவகாசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 1920ம் ஆண்டுகளில்  விவசாயத் தொழில் பிரதானமாக இருந்து வந்தது எனவும் சிவகாசியை சேர்ந்த அய்யநாடார், மற்றும் சண்முக நாடார் ஆகியோரால் சிவகாசியில் தீப்பெட்டி தொழில் தொடங்கப்பட்டது எனவும் கூறிய அவர் 1923 ம் ஆண்டு சண்முக நாடார் ஶ்ரீ காளீஸ்வரி தீப்பெட்டி நிறுவனத்தை தொடங்கினார் எனத் தெரிவித்தார்.  

அரவணைத்து செயல்படும் மோடி:

தற்போது நூற்றாண்டு விழா கொண்டாடும் ஶ்ரீ காளீஸ்வரி குழுமம்  40க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களுடன் பல ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது எனவும் தமிழ்நாடு இந்தியாவின் முக்கியமான மாநிலம் எனவும் அதில் சிவகாசி பட்டாசு இந்திய அளவில் பிரசித்தி பெற்றது எனவும் கூறினார்.  மேலும் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவை  வளர்ச்சி பாதையில் முன்னேற்றி வருகிறார் எனவும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் சமூகத்தினர், பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்  என அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து செயல்பட்டு வருகிறார் எனவும் தெரிவித்தார்.

தயாராகவுள்ள அரசு:

தொடர்ந்து பேசிய அவர் பிரதமர் நரேந்திர மோடி  தலைமையிலான மத்திய அரசு தொழில் துறையினருக்கு ஆதரவாக உள்ளது எனவும் சிவகாசியில் உள்ள தொழில்துறையினருக்கு எந்த பிரச்சனை என்றாலும், எப்போது வேண்டுமானாலும் மத்திய அரசை அணுகுங்கள்உதவி செய்ய தயாராக உள்ளது, எனவும் பேசினார் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே.

இதையும் படிக்க:  வரலாற்றில் இல்லாத அளவிற்கு சித்திரை திருவிழா நடத்தப்படும்... அமைச்சர் சேகர் பாபு!!